சனி, 17 ஜனவரி, 2009

எரியும் இலங்கை



இலங்கை போர் இறுதி கட்டத்தை எட்டி விட்ட தாக இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். இராணுவம் இலக்கை நெருங்கி விட்டதாகவும் பிரபாகரனை சுற்றி வளைத்து விட்டதாகவும் செய்திகள் வருகின்றன. கிளிநொச்சியில் தொடங்கி புலிகளின் கட்டுபாட்டில் உள்ள நகரங்கள் வீழ்ந்து கொண்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன.. இங்கே தமிழ் நாட்டில் சிலர் உண்ணா விரதம் தொடங்கி விட்டனர்.. ஒரு வழியாக வெளிஉறவு செயலர் அந்தஸ்தில் ஒரு அதிகாரி இலங்கை சென்றுள்ளார். ஆனால் இலங்கை பிரச்னையில் இந்திய பல காலகட்டங்களில் எடுத்துள்ள நிலைப்பாடும் பிரந்திய வல்லரசு என்ற நிலையை அடைய அது என்ன செய்திருக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.




ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இலங்கை பிரச்னை 1983 க்கு பின் கனலாக எரியத்தொடங்கியது. அப்போது இருந்த தமிழ் அரசியல் கட்சிகள் உண்மையாகவே தமிழர்களுக்கு குரல் கொடுத்தன. போர் பயிற்சிகள், தளவாடங்கள், பொருளுதவி போன்றவை தாரளமாக அளிக்கப்பட்டது. பிரபாகரன் ஹீரோ வாக போற்றப்பட்டார். இந்திய அமைதிப்படையை அனுப்ப ராஜீவ் முடிவு செய்தது இந்த நிலையை முற்றிலுமாக மாற்ற அடித்தளம் போட்டது என்றே கூறலாம். அதுவரை இந்தியா மீது இருந்த நிலைப்பாட்டையும் புலிகள் மாற்றிக்கொள்ளும் நேரம் வந்தது. இலங்கையில் அமைதிப்படையின் செயல் பாடுகள் பல கண்டனகளை எழுப்பியது.


ராஜீவ் கொல்லப்பட்டது ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கி அது வரை இலங்கை பிரச்னை மேல் இருந்த நிலைபாட்டை தலைகீழாக மாற்றியது. 1990 க்கு பின் தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தனக்கு வசதியாக இப்ப்ரச்னையில் கொள்கை களை வகுத்துக்கொன்டன. ஆதரவு குரல் கொடுத்தவர்கள் தேச துரோகிகள் என்ற முத்தரை குத்தப்பட்டனர். பொடா சட்டம் வசதிற்கேற்ப பயன் படுத்தப்பட்டது. இன்றைய சூழலில் திரை உலகினர் ஒரு சாரார் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். அந்த நோக்கம் கூட சந்தேக கண்ணோடு பார்க்கபடுகிறது




அரசியல் கட்சிகள் சட்ட மன்ற தீர்மானம் போட்டும் பிரணாப் முகர்ஜீ இன்னும் இலங்கை செல்லவில்லை. இலங்கை . இலங்கை பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டார் போல் இருக்கிறது. ஆக இந்திய அரசின் நிலை " அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் என் அவசரப்பட்டு மூக்கை நுழைக்க வேண்டும் " என்று உள்ளதோ என்று என்ன தோன்றுகிறது. ஏன் என்றால் இலங்கைக்கு தார்மீக ரீதியாக உலக நாடுகளின் துணையோடு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த இந்தியாவால் முடியும். உலக அளவில் இந்த பிரச்னையை கொண்டு சென்று சிறிய நாடான இலங்கையை கட்டு படுத்த இயலும் . ஆனால் ஏன் செய்ய மறுக்கிறது ? .இலங்கை பிரச்னையில் ஒரு தெளிவான உறுதியான முடிவு எடுக்காததே காரணம். இலங்கையில் இனபடுகொலை செய்யப்படுவது தமிழர்கள் என்பதை உணர்ந்தும் உறுதியான நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.




தமிழர்கள் கொல்லபடுவதை கண்டித்து வெறும் கண்டன அறிக்கைகள் கொடுத்து விட்டு திருமங்கலம் இடை தேர்தலில் மூழ்கி விட்டன நம் கட்சிகள். வரும் பாராளு மன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட தொடங்கி விட்டனர். கண்டன அறிக்கைகளும் கவிதைகளும் உண்ணா விரதங்களும் பதவி ராஜினாமாக்களும் சாகும் தமிழனை காப்பாற்றாது. அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தால் தமிழகம் உணர்வு பொங்க எழும். மத்திய அரசை விழித்தெழ செய்யும்.போரை நிறுத்தி மீதும் பேச்சு வார்த்தையை துவக்க கை கொடுக்கும். ஆனால் இலங்கை பிரச்னையை தேர்தலுக்கு பயன் படுத்திக்கொள்ளும் எண்ணம் இருந்தால் ...பாவம் இலங்கை தமிழர்களுக்கு அனுதாப கூட்டம் போடுவதை தவிர வேறு வழி இல்லை.

வெள்ளி, 2 ஜனவரி, 2009

உங்கள் வோட்டு !


"மறுபடியும் வந்துட்டோம்ல !" "ஆகா ! வந்துட்டாங்கையா வந்துட்டாங்கையா ! தேர்தல் வன்முறை பண்ண வந்துட்டங்கயா ! "வடிவேல் காமெடி என்றால் ரசித்து சிரித்து விட்டு போகலாம்.ஆனால் இந்திய ஜனநாயகத்தின் புற்று நோயாக உள்ளது தேர்தல் வன்முறை.

சுதந்திரம் பெற்ற சில வருடங்களுக்கு வன்முறை வாசனை இல்லாமல் ஓரளவு ஒழுங்காய் தான் நடந்தன தேர்தல்கள். ஆனால் எழுபதுக்கு பின்னர் வந்த ஆட்சியாளர்கள் பதவியை பிடிக்க என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்றே நிலைப்பாட்டை எடுத்த பின் தான் தேர்தல் வன்முறை தலை எடுத்தது. இன்று வன்முறை இல்லாத தேர்தல் இல்லை. மக்களும் அதற்கு தங்களை பழக்கி கொண்டார்கள்.எப்படி வோட்டு போட்டாலும் ஒன்றும் ஆக போவதில்லை. கட்சிகாரர்கள் கொடுக்கும் பணமாவது மிஞ்சட்டுமே என்றே எண்ணம் பெரும்பாலான அடித்தட்டு மக்களுக்கு வந்து விட்டதாகவே தோன்றுகிறது.யாரும் சரியில்லை என்று வியாகியானம் பேசும் பெருசுகள் கூட வன்முறையை காரணம் காட்டி வோட்டுசாவடி பக்கம் வருவதில்லை.அவர்கள் போகட்டும். தேர்தலில் கட்சிகாரர்கள் வோட்டு போட்டது போக முடிவை நிர்ணயம் செய்யும் நடுநிலையாளர்கள் தைரியமாக வாக்கு சாவடி வந்து வோட்டு போடும் பாதுகாப்பான சூழ்நிலை தற்போது இல்லை.பின் எப்படி நியாயமான தேர்தல் நடக்கும்.?

தேர்தல் நடக்கும் தொகுதிக்கு மிதமிஞ்சிய பணத்தையும் அடியாட்களையும் போட்டி போட்டு அனுப்புகின்றன கட்சிகள்.ஒரு அசாதரண சூழ்நிலையை தோற்றுவித்து அதில் தங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி வெற்றி பெற கட்சிகள் முனைகின்றன.அதிலும் இடை தேர்தல்களில் வன்முறைகள் பெருமளவில் நடக்கின்றன. மக்களிடம் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் இடைதேர்தலை ஒரு கௌரவ பிரச்சனையாக எடுத்துக்கொள்கின்றன. சரி இதெல்லாம் புதுசா என்று நீங்கள் கேட்கலாம். இந்த பதிவின் நோக்கம் அதுவல்ல. வாக்காளர்கள் என்ற முறையில் நம்மால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு விடை காண்போம்..

சமீபத்தில் நடைபெற்ற காஷ்மீர் தேர்தல் ஒரு உதாரணம் . மக்கள் துப்பாக்கி தோட்டாவிற்கு பயப்படாமல் வரிசையில் நின்று தங்கள் வாக்குரிமையை நிறைவேற்றினர். ஆக முதலில்பயப்படாமல் வாக்கு சாவடிக்கு செல்ல வேண்டும். கடிக்கிற பாம்பில் எந்த பாம்பு நல்ல பாம்பு என்பது போல் எந்த வேட்பாளரும் சுத்தமில்லை என்ற சூழ்நிலையில் படித்த , ஓரளவிற்கு சுயமாக சிந்திகக்கூடிய (!),தன்மானம் கொஞ்சமாவது உடைய ,குற்ற பின்னணி இல்லாத , நல்ல குடும்ப பின்னணி உள்ள ஒருவரை , அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்றாலும், சுயேச்சை என்றாலும் அவருக்கு வாக்கு அளிக்கலாம்.பெரிய கட்சிகளின் வேட்பாளர் யாராவது ஒருவர் வந்தால்தான் பரவாயில்லை என்று நம் நினைப்பதே மோசமான வேட்பாளர் ஜெயித்து விட வழி செய்கிறது. யாரும் பிடிக்க வில்லையா ?. " யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை "என்று தெரிவிக்க வழி உள்ளது.


நினைவிருக்கட்டும். உங்கள் இடது ஆட்காட்டி விரலில் இடப்படும் மை நம்முடைய , நம் சந்ததிஉடைய தலை எழுத்தை மற்றும் சக்தி படைத்தது. ஒவ்வொரு வோட்டும் முக்கியம்தான்.சிறிய ஒட்டு வித்யாசத்தில் ஜெயித்த பல அரசியல்வாதிகள் நாட்டின் தலைவிதியை மாற்றி உள்ளார்கள். உங்கள் ஒரு வோட்டு மீண்டும் ஒரு மும்பை தீவிரவாதத்தை உருவாக்கும் அல்லது ஒழிக்கும். நம் கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு, வேலை, சுதந்திரம் எல்லாவற்றையும் நிர்ணயிக்கும் சக்தி உள்ள வோட்டு என்னும் பிரமாஸ்திரத்தை சாதாரண மூட்டை பூச்சிகளுக்கு பயந்து பிரயோகிக்காமல் விட்டு விடாதீர்கள்.