வெள்ளி, 12 டிசம்பர், 2008

"தலை" யாய கடமை

வல்லரசு நாடாக உள்ள இந்தியாவை பார்த்து மற்ற நாடுகள் பொறாமை பட ஒரு சாதனை உள்ளது. பெருமை பட ஒன்றுமில்லை. இன்றைய தேதியில் உலகில் இந்தியாவில் தான் சாலை விபத்துகள் அதிகம் என்று ஒரு புள்ளி விவரம் (பி பி சி ) சொல்கிறது.ஒவ்வொரு வருடமும் சாலை விபத்துகளால் இந்தியா தன்னுடைய மொத்த நாட்டு உற்பத்தியில் யில் மூன்று சதவீதத்தை இழக்கிறது.சாலை விபத்துக்கள் விளைவாக ஏற்படும் சமுதாய , பொருளாதார நஷ்டங்கள் இந்தியாவில்தான் அதிகம்.எழுபது சதவீத குடும்பங்கள் சாலை விபத்து காரணமாக உடனடியாக வறுமைகோட்டுக்கு கீழ் சென்று விடுகின்றன. சர்வ சாதரணமாக ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர். இருபது லட்சம் பேர் காயமடைகின்றனர்.

அரசு எய்ட்ஸ் டி பீ , மலேரியா போன்ற வியாதிகளை ஒழிக்க ஏராளமான பணத்தை செலவு செய்கிறது. ஆனால் மேற்குறிபிட்ட நோய்களில் இறப்போரை விட அதிக அளவில் சாலை விபத்தில் இந்தியர்கள் இறக்கின்றனர்.ஆனால் அரசு இந்த எண்ணிக்கை குறைக்க சீரியசான நடவடிக்கை ஏதும் எடுத்ததாக தெரியவில்லை. சாலை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நம் ஜனங்களிடம் குறைவாகவே உள்ளது. நமக்கு அல்லது நமக்கு தெரிந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் ஒழிய அதை பற்றி நாம் சிந்திப்பது இல்லை.

ஏன் இந்தியாவில் மட்டும் இவ்வளவு இழப்புகள்? மக்கள் தொகை அதிகம் என்ற காரணம் சொல்லி ஜோக் அடிக்காதீர்கள். இதோ பட்டியல் . உலகிலேயே இந்தியாவில்தான் லைசென்ஸ் வாங்குவது சுலபம். சாலை விதிகள் கடுமையாக அமல்படுத்துவது இல்லை. ஹெல்மட் கட்டாயம் இல்லை. ஜாலியாக குடித்து விட்டு வண்டி ஓட்டலாம். யார் மீதாவது வண்டி ஏற்றினால் கொஞ்ச .ஸ்பீட் கண்ட்ரோல் சாதனம் வைக்க எதிர்ப்பு உள்ளது. சாலைகள் மோசமாக எப்போதும் பல்லை காட்டும். முக்கால் வாசி விதிகள் கிலோ எவ்வளவு என்பார்கள். செல் போன் பேசி டிரைவிங் செய்கிறார்கள்.


ஆக யாருக்கும் பொறுப்பில்லை என்ற நிலையே உள்ளது. அட என்னதாங்க செய்கிறது ... இதோ படிங்க. அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் உயிரின் அருமையை புரிய வைக்கலாம் . விபத்து ஏற்படுத்தினால் லைசென்ஸ் ரத்து .. விபத்து ஏற்படுத்துகிறவர் அதிக இழப்பீடு தரவேண்டும் ..லைசென்ஸ் பெற குறைந்த பட்ச வயதை ஏற்றலாம்..அனைத்து வாகனங்களில் ஸ்பீட் கண்ட்ரோல் சாதனம் கட்டாயமாக்கலாம்.சிறு வயதில் சாலை பற்றிய விழிப்புணர்வை கற்று கொடுக்கலாம்.சாலைகளை நன்றாக பராமரிக்கலாம். முக்கியமாக ஹெல்மட் அணிவதை கட்டாய மாக்கலாம்... எல்லாம் செய்யலாம். யார் செய்வது.. நாம் தான். முதலில் நாம் ஹெல்மட் அணிவோம், ஒழுங்காக சாலை விதிகளை கடைபிடிப்போம்.ஏன் என்றால் எங்கேயாவது மாட்டி உயிரை விட்டு ஆவி யான பின் இந்த மாதிரி ப்ளாக் ஓபன் செய்து படிக்க எல்லாம் முடியாதுங்க. மேலும் உங்கள் இருப்பிடத்தை உங்கள் குடும்பத்தில் வேறு யாராலும் நிரப்பிட முடியாதுங்க.இந்த ப்ளாக் படித்த ஐந்து நிமிடத்தில் எத்தனை உயிர் போனதோ ? .