சனி, 17 ஜனவரி, 2009

எரியும் இலங்கை



இலங்கை போர் இறுதி கட்டத்தை எட்டி விட்ட தாக இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். இராணுவம் இலக்கை நெருங்கி விட்டதாகவும் பிரபாகரனை சுற்றி வளைத்து விட்டதாகவும் செய்திகள் வருகின்றன. கிளிநொச்சியில் தொடங்கி புலிகளின் கட்டுபாட்டில் உள்ள நகரங்கள் வீழ்ந்து கொண்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன.. இங்கே தமிழ் நாட்டில் சிலர் உண்ணா விரதம் தொடங்கி விட்டனர்.. ஒரு வழியாக வெளிஉறவு செயலர் அந்தஸ்தில் ஒரு அதிகாரி இலங்கை சென்றுள்ளார். ஆனால் இலங்கை பிரச்னையில் இந்திய பல காலகட்டங்களில் எடுத்துள்ள நிலைப்பாடும் பிரந்திய வல்லரசு என்ற நிலையை அடைய அது என்ன செய்திருக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.




ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இலங்கை பிரச்னை 1983 க்கு பின் கனலாக எரியத்தொடங்கியது. அப்போது இருந்த தமிழ் அரசியல் கட்சிகள் உண்மையாகவே தமிழர்களுக்கு குரல் கொடுத்தன. போர் பயிற்சிகள், தளவாடங்கள், பொருளுதவி போன்றவை தாரளமாக அளிக்கப்பட்டது. பிரபாகரன் ஹீரோ வாக போற்றப்பட்டார். இந்திய அமைதிப்படையை அனுப்ப ராஜீவ் முடிவு செய்தது இந்த நிலையை முற்றிலுமாக மாற்ற அடித்தளம் போட்டது என்றே கூறலாம். அதுவரை இந்தியா மீது இருந்த நிலைப்பாட்டையும் புலிகள் மாற்றிக்கொள்ளும் நேரம் வந்தது. இலங்கையில் அமைதிப்படையின் செயல் பாடுகள் பல கண்டனகளை எழுப்பியது.


ராஜீவ் கொல்லப்பட்டது ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கி அது வரை இலங்கை பிரச்னை மேல் இருந்த நிலைபாட்டை தலைகீழாக மாற்றியது. 1990 க்கு பின் தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தனக்கு வசதியாக இப்ப்ரச்னையில் கொள்கை களை வகுத்துக்கொன்டன. ஆதரவு குரல் கொடுத்தவர்கள் தேச துரோகிகள் என்ற முத்தரை குத்தப்பட்டனர். பொடா சட்டம் வசதிற்கேற்ப பயன் படுத்தப்பட்டது. இன்றைய சூழலில் திரை உலகினர் ஒரு சாரார் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். அந்த நோக்கம் கூட சந்தேக கண்ணோடு பார்க்கபடுகிறது




அரசியல் கட்சிகள் சட்ட மன்ற தீர்மானம் போட்டும் பிரணாப் முகர்ஜீ இன்னும் இலங்கை செல்லவில்லை. இலங்கை . இலங்கை பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டார் போல் இருக்கிறது. ஆக இந்திய அரசின் நிலை " அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் என் அவசரப்பட்டு மூக்கை நுழைக்க வேண்டும் " என்று உள்ளதோ என்று என்ன தோன்றுகிறது. ஏன் என்றால் இலங்கைக்கு தார்மீக ரீதியாக உலக நாடுகளின் துணையோடு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த இந்தியாவால் முடியும். உலக அளவில் இந்த பிரச்னையை கொண்டு சென்று சிறிய நாடான இலங்கையை கட்டு படுத்த இயலும் . ஆனால் ஏன் செய்ய மறுக்கிறது ? .இலங்கை பிரச்னையில் ஒரு தெளிவான உறுதியான முடிவு எடுக்காததே காரணம். இலங்கையில் இனபடுகொலை செய்யப்படுவது தமிழர்கள் என்பதை உணர்ந்தும் உறுதியான நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.




தமிழர்கள் கொல்லபடுவதை கண்டித்து வெறும் கண்டன அறிக்கைகள் கொடுத்து விட்டு திருமங்கலம் இடை தேர்தலில் மூழ்கி விட்டன நம் கட்சிகள். வரும் பாராளு மன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட தொடங்கி விட்டனர். கண்டன அறிக்கைகளும் கவிதைகளும் உண்ணா விரதங்களும் பதவி ராஜினாமாக்களும் சாகும் தமிழனை காப்பாற்றாது. அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தால் தமிழகம் உணர்வு பொங்க எழும். மத்திய அரசை விழித்தெழ செய்யும்.போரை நிறுத்தி மீதும் பேச்சு வார்த்தையை துவக்க கை கொடுக்கும். ஆனால் இலங்கை பிரச்னையை தேர்தலுக்கு பயன் படுத்திக்கொள்ளும் எண்ணம் இருந்தால் ...பாவம் இலங்கை தமிழர்களுக்கு அனுதாப கூட்டம் போடுவதை தவிர வேறு வழி இல்லை.