வியாழன், 18 டிசம்பர், 2008

குடியும் குடித்தனமும்

பெரியவர்கள் நம்மை வாழ்த்தும் போது " குடியும் குடித்தனமுமாக இரு "என்று வாழ்த்துவார்கள். இந்தியாவில் தற்போது உள்ள பெரும்பாலான வயசுபசங்கள் மேல்சொன்ன அறிவுரையை தப்பாமல் பின் பற்றுகிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.

வேகமாக பரவும் மேல் நாட்டு கலாசாரம், நல்ல சம்பாதிக்கும் வாய்ப்பு , இதர சூழ்நிலைகள் போன்றவை இவர்களை " தண்ணியில்" தள்ளுகின்றன. முக்கியமான காரணங்கள் என்று பார்த்தால்.. " அப்பா அடிச்சார் .. நானும் அடிக்கறேன்". குடும்ப பழக்கம் காரணம். "கடன் பிரச்னை - தண்ணி அடிக்கறேன் " "பொண்டாட்டி சரியில்ல " " வேலை பளு அதிகம்" " சும்மா ஜாலிக்காக குடிக்கறேன்" காரணம் ஆயிரம் .. ஆனால் ரிசல்ட் ஒன்னுதான் .

ஒரு மிடில் கிளாஸ் மனிதன் குடிப்பதனால் என்ன நாட்டுக்கு நஷ்டம் என்று கேட்கலாம். குடிப்பதனால் பணம் கரைகிறது மனம் வலு இழக்கிறது குணம் தொலைகிறது. தன்னை மறக்கிறவன் குடும்பத்தையும் நாட்டையும் மறக்கிறான் தனி மனித செயல்பாடு வீண் அடிக்கப்படுகிறது . குடும்பத்தில் பிரச்சனை விஸ்வ ரூபம் எடுக்கிறது. பரஸ்பர நம்பிக்கை தொலைகிறது.கள்ள தொடர்புகள் உருவாகின்றது. கொலை கொள்ளை நடக்கிறது. பணத்திற்காக எதையும் செய்ய துணியும் கூட்டம் தலை எடுக்கிறது. பச்சை குழந்தையை கொஞ்ச வேண்டியவன் பச்சை கடை எங்கே என்று தேடி அலைகிறான். தண்ணி அடித்து தலை நிக்காமல் சென்று தடுமாறி கீழே விழுந்து தன் குடும்பத்தையும் நாட்டையும் நடு தெருவிற்கு கொண்டு செல்கிறான் குடிமகன்.திறமையும் தகுதியும் உள்ளவர்கள் கடுமையாக உழைத்து தன்னையும் நாட்டையும் மேம்படுத்த வேண்டிய வயதில் வீணாக குடித்து ஒரு சந்ததியை குட்டிச்சுவர் ஆக்குகிறார்கள்.

ஆரம்பத்தில் ஜாலியை குடிக்கும் பழக்கம் மெல்ல மெல்ல தவிர்க்க முடியாத நிலையை உருவாக்குகிறது. பின் அவனது குடும்பத்தையும் பதம் பார்க்கிறது.

இதை யார் சரி செய்வது. நாம்தான். எப்படி ? தனி மனித ஒழுக்கம் மூலம் மட்டுமே .குடிப்பவர்கள் உங்கள் நண்பர்களாக இருந்தால் அதன் உடல் ரீதியான விளைவுகள், அதனால் குடும்பத்துக்கும் நேரும் பிரச்சனைகள் , பண விரயம் போன்றவற்றை புரியும்படி கூறலாம். சமுதாயத்தில் எந்த அந்தஸ்தில் இருந்தாலும் குடிகாரன் என்ற ஒரு அடையாளத்தில் அத்தனையும் அடி பட்டு போவதை தெளிவு படுத்தலாம். குடிகாரர்கள் வெருக்கதக்கவர்கள் என்பதை அவர்கள் உணரும்படி செய்யலாம்.. செய்வோம்..