வெள்ளி, 2 ஜனவரி, 2009

உங்கள் வோட்டு !


"மறுபடியும் வந்துட்டோம்ல !" "ஆகா ! வந்துட்டாங்கையா வந்துட்டாங்கையா ! தேர்தல் வன்முறை பண்ண வந்துட்டங்கயா ! "வடிவேல் காமெடி என்றால் ரசித்து சிரித்து விட்டு போகலாம்.ஆனால் இந்திய ஜனநாயகத்தின் புற்று நோயாக உள்ளது தேர்தல் வன்முறை.

சுதந்திரம் பெற்ற சில வருடங்களுக்கு வன்முறை வாசனை இல்லாமல் ஓரளவு ஒழுங்காய் தான் நடந்தன தேர்தல்கள். ஆனால் எழுபதுக்கு பின்னர் வந்த ஆட்சியாளர்கள் பதவியை பிடிக்க என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்றே நிலைப்பாட்டை எடுத்த பின் தான் தேர்தல் வன்முறை தலை எடுத்தது. இன்று வன்முறை இல்லாத தேர்தல் இல்லை. மக்களும் அதற்கு தங்களை பழக்கி கொண்டார்கள்.எப்படி வோட்டு போட்டாலும் ஒன்றும் ஆக போவதில்லை. கட்சிகாரர்கள் கொடுக்கும் பணமாவது மிஞ்சட்டுமே என்றே எண்ணம் பெரும்பாலான அடித்தட்டு மக்களுக்கு வந்து விட்டதாகவே தோன்றுகிறது.யாரும் சரியில்லை என்று வியாகியானம் பேசும் பெருசுகள் கூட வன்முறையை காரணம் காட்டி வோட்டுசாவடி பக்கம் வருவதில்லை.அவர்கள் போகட்டும். தேர்தலில் கட்சிகாரர்கள் வோட்டு போட்டது போக முடிவை நிர்ணயம் செய்யும் நடுநிலையாளர்கள் தைரியமாக வாக்கு சாவடி வந்து வோட்டு போடும் பாதுகாப்பான சூழ்நிலை தற்போது இல்லை.பின் எப்படி நியாயமான தேர்தல் நடக்கும்.?

தேர்தல் நடக்கும் தொகுதிக்கு மிதமிஞ்சிய பணத்தையும் அடியாட்களையும் போட்டி போட்டு அனுப்புகின்றன கட்சிகள்.ஒரு அசாதரண சூழ்நிலையை தோற்றுவித்து அதில் தங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி வெற்றி பெற கட்சிகள் முனைகின்றன.அதிலும் இடை தேர்தல்களில் வன்முறைகள் பெருமளவில் நடக்கின்றன. மக்களிடம் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் இடைதேர்தலை ஒரு கௌரவ பிரச்சனையாக எடுத்துக்கொள்கின்றன. சரி இதெல்லாம் புதுசா என்று நீங்கள் கேட்கலாம். இந்த பதிவின் நோக்கம் அதுவல்ல. வாக்காளர்கள் என்ற முறையில் நம்மால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு விடை காண்போம்..

சமீபத்தில் நடைபெற்ற காஷ்மீர் தேர்தல் ஒரு உதாரணம் . மக்கள் துப்பாக்கி தோட்டாவிற்கு பயப்படாமல் வரிசையில் நின்று தங்கள் வாக்குரிமையை நிறைவேற்றினர். ஆக முதலில்பயப்படாமல் வாக்கு சாவடிக்கு செல்ல வேண்டும். கடிக்கிற பாம்பில் எந்த பாம்பு நல்ல பாம்பு என்பது போல் எந்த வேட்பாளரும் சுத்தமில்லை என்ற சூழ்நிலையில் படித்த , ஓரளவிற்கு சுயமாக சிந்திகக்கூடிய (!),தன்மானம் கொஞ்சமாவது உடைய ,குற்ற பின்னணி இல்லாத , நல்ல குடும்ப பின்னணி உள்ள ஒருவரை , அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்றாலும், சுயேச்சை என்றாலும் அவருக்கு வாக்கு அளிக்கலாம்.பெரிய கட்சிகளின் வேட்பாளர் யாராவது ஒருவர் வந்தால்தான் பரவாயில்லை என்று நம் நினைப்பதே மோசமான வேட்பாளர் ஜெயித்து விட வழி செய்கிறது. யாரும் பிடிக்க வில்லையா ?. " யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை "என்று தெரிவிக்க வழி உள்ளது.


நினைவிருக்கட்டும். உங்கள் இடது ஆட்காட்டி விரலில் இடப்படும் மை நம்முடைய , நம் சந்ததிஉடைய தலை எழுத்தை மற்றும் சக்தி படைத்தது. ஒவ்வொரு வோட்டும் முக்கியம்தான்.சிறிய ஒட்டு வித்யாசத்தில் ஜெயித்த பல அரசியல்வாதிகள் நாட்டின் தலைவிதியை மாற்றி உள்ளார்கள். உங்கள் ஒரு வோட்டு மீண்டும் ஒரு மும்பை தீவிரவாதத்தை உருவாக்கும் அல்லது ஒழிக்கும். நம் கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு, வேலை, சுதந்திரம் எல்லாவற்றையும் நிர்ணயிக்கும் சக்தி உள்ள வோட்டு என்னும் பிரமாஸ்திரத்தை சாதாரண மூட்டை பூச்சிகளுக்கு பயந்து பிரயோகிக்காமல் விட்டு விடாதீர்கள்.

4 கருத்துகள்:

Maximum India சொன்னது…

உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன்.

உயர்ந்த நோக்கத்துடன் கூடிய அருமையான பதிவு.

மேலும் பல முத்திரை படைக்க வாழ்த்துக்கள்.

பொதுஜனம் சொன்னது…

நன்றி.

கபீஷ் சொன்னது…

Hi,

Good post. We have to select the best person among the worst persons.

பொதுஜனம் சொன்னது…

thank u kabeesh.